முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவுளர்கள் குறித்த தோனியின் கருத்து: சந்தீப் பாட்டீல் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 24 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை - புதிய வேகப்பந்து வீந்துச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என கூறிவந்த தோனியின் கருத்துப் பற்றி சந்தீப் பாட்டீல் விளக்கமளித்துள்ளார். இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இதில் பங்குபெறும் வீரர்களின் பட்டியலை சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழு நேற்று வெளியிட்டது.  புதிய வேகப்பந்து வீந்துச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்தை தோனி வலியுறித்தி வந்தார்.

ஆனால் அணியில் மீண்டும் 4 வேகப்பந்து வீச்சாளர்களே இடம்பெற்றுள்ளனர்.  வேகப்பந்து வீச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் தேர்வுக் கொள்கைகள் குறித்து தோனியின் கருத்து பற்றி சந்தீப் பாட்டீல் கூறியதாவது, மகேந்திர சிங் தோனி என்ன கூறினார் என்பது பற்றி நான் பேசவில்லை. அணியில் ஒரு சமச்சீரான தன்மை வேண்டும் என்பதையே நாங்கள் சிறிது காலமாக முயற்சி செய்து வருகிறோம்.

இலங்கை பிட்ச் நிலவரங்களுக்கு இதுவே சிறந்த பந்துவீச்சுச் சேர்க்கையாகும். எனவே அனைத்து தேர்வுக்குழு உறுப்பினர்களும் அவ்வாறு உணர்ந்தோம், அதன் படி தேர்வு செய்துள்ளோம் என்றார். நாம் பார்த்ததிலேயே தோனி ஒரு சிறந்த தலைவர் என்பதை நாம் அறிவோம். அதனால் பவுலர்கள் குறித்து கருத்து கூற அவருக்கு அனைத்து உரிமைகளும் உண்டு” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து