முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.எல்.சி. பிரச்சனை: பேச்சுவார்த்தை தோல்வி - வேலை நிறுத்தம் தொடரும்

திங்கட்கிழமை, 27 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவன நிரந்தர தொழிலாளர்களுடன் சென்னையில் நேற்று  நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வழக்கம்போல் வேலை நிறுத்தம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நேற்று  நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க பிரதிநிதிகளும், தொழிலாளர் நல அணைய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை என பேச்சுவார்த்தைக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இதற்கு முன்னதாக அறிவித்திருந்தபடி, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும், சி.ஐ.டி.யூ. தலைமையில் பேச்சுவார்த்தையில் இல்லாத தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து