முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல்கலாமின் மறைவை ஒட்டி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: அப்துல்கலாமின் மறைவை ஒட்டி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை சென்ட்ரலில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அவரது படத்திற்கு பொதுமக்களும், பயணிகளும், கண்ணீருடன், மலர் அஞ்சலி செலுத்தினர்.அப்போது குமார் என்ற பயணி, அப்துல்கலாம் தமிழராய் பிறந்தாலும், இந்தியா முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு பெரும் வழிகாட்டியாய் திகழ்ந்தார். அவருக்கு பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்துகிறோம் எனத் தெரிவித்தார். இதேபோல், ஈஸ்வரி என்ற பயணி கூறுகையில், தமிழராய் பிறந்த நம் எல்லோரையும் தலைநிமிரச் செய்தவர் அப்துல்கலாம்.

அவரால்தான் எங்களைப் போன்ற நடுத்தர மக்களும், அணு விஞ்ஞானம் குறித்தும், ராக்கெட் குறித்தும் அறிந்து கொள்ள முடிந்தது எனத் தெரிவித்தார். கிண்டியில் ஏராளமான வணிகர்கள் கடைகளை மூடி அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தினர்.இதேபோல், சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் பொதுமக்களும், பல்வேறு நலச்சங்கத்தினரும், தாங்களாகவே ஆங்காங்கே அப்துல்கலாமின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது உருவப்படத்திற்கு, மலர் தூவியும், மெழுகுவத்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.பல்வேறு இடங்களில் வணிகர்களும் கடைகளை மூடி அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து