முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலாம் கலக்கம் இல்லாத அறிவின் திரு உரு மதுரை ஆதினம் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலக்கம் இல்லாத அறிவின் திரு உரு என கலாமின் மறைவுக்கு மதுரை ஆதினம் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்றுமுன்தினம்(திங்கள்) மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு மதுரை ஆதீனம்இரங்கல் தெரிவித்து அறிக் கை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது,

நமது நாட்டின் மிகப்பெரும் வழிகாட்டி இணையில்லாத அறிவின் திரு உரு, இந்திய விஞ்ஞானத்தின் கரு உரு, இந்து, முஸ்லீம், கிறித்துவர் என அனைவராலும் அனைவராலும் ஏற்றுகொண்ட அறிவியல் முனிவர்,மாணவர்களின் உள்ளத்தில் என்றென்றும் வீற்றிருக்கும் போரசிரியப்பெருந்தலைவர், இந்திய திரு நாடு ஓர் உயர் நாடு அறிவியல் நாடு,என உலகுக்கு எடுத்துக்காட்டி பெருமை கூட்டிய அருந்தலைவர், ஏழ்மையுடன் பிறந்து வளர்ந்தாலும் தாழ்மையுடன் இருந்து தாயாகி பாசமுடன் பழகிய தங்கமான தலைவர், அவர்வாழ்க் கைபழுது இல்லாத பண்பான வாழ்க் கை, பம்பரமாய் அவர் சுற்றிச்சுழன்று வந்தாரே ,அவர் உடல் மண்ணில் புதைந்து விடலாம்,ஆனால் அவர் என்றுமே மக்கள் மனதில் மறைந்து விடமாட்டார். இறைவனைப்போல அவரது ஆன்மா என்றும் நிரந்தரமாக இவ்வுலகில் சுற்றிச்சுழன்று கொண்டே இருக்கும்,அவர் சொன்னதெல்லாம் நீதிகளே, சத்தியத்தின் சேதிகளே அவர் புகழ் அணையா விளக்கு .கலாம் நாமம் வாழ்க, அவர் ஆன்மா சாந்தி பெறுக. இவ்வாறு மதுரைஆதீனம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்