முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இறுதியில் நுழைந்தார் சாய்னா நேவால்

சனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

ஜகார்த்தா - உலக பேட்மிண்டன், சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் நுழைந்துள்ளார். இந்தோனேஷியா, ஜகார்த்தாவில் நடைப்பெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா, இந்தோனேஷிய வீராங்கனை லின்டாவேனி ஃபனேட்ரியை நேர் செட்களில் தோற்கடித்தார்.

உலக சாம்பியன்ஸ் இறுதி போட்டியயில் நுழையும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை இதன் மூலம் பெற்றுள்ளார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப், போட்டிகள் இன்று நடைபெற்ற அரையிறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் இந்தோனேஷிய வீராங்கனை லிண்டாவேனி ஃபனேட்ரி ஆகியோர் மோதினர்.

இப்போட்டியை 21-17 மற்றும் 21-17 என்ற நேர் செட்களில் வென்று சாய்னா பைனலுக்குள் நுழைந்தார். இதன்மூலம் பைனலுக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் சாய்னா பெற்றார். இறுதி போட்டியில், உலகின் நம்பர்-1 வீராங்கனையான ஸ்பெயினின், கரோலினா மரினை சாய்னா சந்திக்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்