முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தேர்தலில் ராஜபக்சே தங்கை தோல்வி

செவ்வாய்க்கிழமை, 18 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு: இலங்கை தேர்தலில் ராஜபக்சே தங்கை சொந்த ஊரிலேயே தோல்வி அடைந்து மண்ணை கவ்வினார்.  இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தங்கை நிருபமா ராஜபக்சே போட்டியிட்டார். இவர் தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டை தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில் நிருபமா ராஜபக்சே தோல்வி அடைந்தார். அதன் மூலம் அவர் தனது சொந்த ஊரிலேயே மண்ணை கவ்வினார். இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இதை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட ராஜபக்சேவின் மகன்கள் ஷமல் ராஜபக்சே, நாமல் ராஜபக்சே மற்றும் மகிந்த அமரவீர, டிஎச் சானக்க ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்