முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் ஐ.எஸ். தற்கொலை படை தாக்குதலில் 13 பேர் பலி

புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ்: வடகிழக்கு சிரியாவில் குர்திஷ் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் இஸ்லாமிக் ஸ்டேட் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 13 பேர் பலினார்கள். குவாமிஷ்லி என்ற ஊரில் குர்தீஷ் போலீஸ் நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, பிரிட்டனைச் சேர்ந்த சிரியா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியா அரசு செய்தி ஊடகமான சனா, இந்தத் தாக்குதலில் 13 பேர் பலியானதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதலே, சிரியாவில் குர்திஷ் படையினர் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர், அமெரிக்க வான்வழி தாக்குதலின் பயனாக சிரியாவில் ஐ.எஸ். கைப்பற்றிய பகுதிகள் சிலவற்றை குர்தீஷ் படைகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்