முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சானியாவுக்கு ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருது: ஜனாதிபதி பிரணாப் வழங்கினார்

சனிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி - குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் விளையாட்டு துறையின் உயரிய விருதாக கருதப்படும் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு குடியரசு தலைவர் பிரணாப் வழங்கி கவுரவித்தார். இந்த விருதை சானியாவுக்கு வழங்கக்கூடாது என கர்நாடக நீதிமன்றத்தில் பாரா அத்லட் வீராங்கனை எச்.என்.கிரிஷா வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்றம் 15 நாள்களுக்கு பதில் அனுப்புமாறு சானியா மிர்சா, விளையாட்டு துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெரும் 2-வது டென்னிஸ் வீரர் சானியா மிர்சா ஆவார். இதற்கு முன் 1996 மற்றும் 1997-ல் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர்த்து விளையாட்டு துறைக்கு வழங்கப்படும் மற்றொரு விருதான அர்ஜூனா விருது 17 பேருக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த பளு தூக்கும் வீரர் சதீஸ் குமார் சிவலிங்கத்திற்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்