முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷீனாவை போல் என்னையும் கொல்ல முயற்சித்தார் இந்திராணி: மகன் புகார்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

மும்பை: ஷீனா போராவைக் கொலை செய்வதற்கு முன்னதாக விஷ ஊசி போட்டு தன்னையும் கொல்ல முயற்சித்ததாக தாயார் இந்திராணி மீது பரபரப்பு குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார் அவரது மகன் மிக்கயில் போரா. ஸ்டார் இந்தியா சேனலின் முன்னாள் தலைமை செயலதிகாரி பீட்டர் முகர்ஜியின் 2வது மனைவி இந்திராணி முகர்ஜி ஆவார். கடந்த 2002ம் ஆண்டு பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் இந்திராணி.

இந்திராணிக்கு முதல் கணவர் மூலம் ஷீனா போரா என்ற மகளும், மிக்கயில் போரா என்ற மகனும் உண்டு. ஆனால், சமுதாயத்தில் அவர்களைத் தனது தம்பி, தங்கை எனக் கூறி ஏமாற்றி வந்துள்ளார் அவர்.இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு ஷீனா கொலை செய்யப்பட்டார். தனது மூன்றாம் கணவர் பீட்டரின் முதல் தார மகனைக் காதலித்ததால் ஷீனா கவுரவக் கொலை செய்யப் பட்டதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்