முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.2 கோடி பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகார்: நடிகர் கிருஷ்ணா மீது வழக்கு

வியாழக்கிழமை, 17 செப்டம்பர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை - ரூ.2 கோடி பணம் கேட்டு மனைவியை தொந்தரவு செய்வதாக நடிகர் கிருஷ்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெத்திகுட்டை பகுதியை சேர்ந்த ரங்கநாதன். இவரது மகள் ஹேமலதா. இவர் சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவர் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது,  எனக்கும், கழுகு, யாமிருக்க பயமேன் மற்றும் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் யட்சன் உள்பட பல்வேறு படங்களில் நடித்த நடிகர் கிருஷ்ணானவுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.

2014-ல் இருவருக்கும் மேட்டுப்பாளையத்தில் திருமணம் நடந்தது. திருமணமத்தின் போது 118 பவுன் நகை, கார் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதற்கிடையே எனது கணவர் கிருஷ்ணாவுக்கும், நடிகை சுனைனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதைப்பற்றி நான் கேட்டபோது சினிமாவில் படவாய்ப்பு கிடைக்க நான் அவரிடம் தொடர்பு வைத்திருப்பதாக கூறினார். இந்நிலையில் பட வாய்ப்புக்காக பெற்றோரிடம் ரூ.2 கோடி வாங்கி வருமாறு கூறினார்.

நான் மறுக்கவே என்னை அடித்து உதைத்து கொடுமை செய்ததுடன் கொலை மிரட்டல் விடுத்தார். இதற்கு மாமனார், மாமியார் உடந்தையாக இருந்தனர். இந்நிலையில் என்னை விவாகரத்து செய்வதாக கூறி வக்கீல் மூலம் கோர்ட்டில் விண்ணப்பித்தார். அது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறி இருந்தார். போலீசார் நடிகர் கிருஷ்ணா, மாமனார் சேகர் என்ற குலசேகரன் , மாமியார் மதுபாலா ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல் உள்பட 4 பிரவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்