முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளச்சாராயத்தை ஒழிக்க பாடுபட்ட 3 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் பதக்கம்: ஜெயலலிதா வழங்குகிறார்

வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழக உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

முதல்–அமைச்சரின் ஆணைப்படி தஞ்சை மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், நாகை மாவட்டம் புதுப்பட்டினம் சிறப்பு எஸ்.ஐ. ராமமூர்த்தி, தர்மபுரி மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க சிறப்பு குழு தலைமை காவலர் ராஜு ஆகியோருக்கு கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியதற்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படுகிறது.இந்த விருதுகளை அடுத்த ஆண்டு குடியரசு தினத்தன்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார்.விருதை பெறுபவர்களுக்கு பதக்கங்களுடன் பரிசு தொகையாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்