முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.கே.சிங்கின் கருத்துக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரியானா மாநிலத்தில் தலித் குழந்தைகள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து மத்தியமந்திரி வி.கே.சிங் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிக உயரிய பதவியில் இருக்கும் வி.கே.சிங் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரதமர் இது போன்ற விரும்பத்தகாத கருத்துக்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே அவரின் கருத்துக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும். பா.ஜ.க.வினர் கருத்துக்களை தெரிவிக்கும் போது பொறுப்பான முறையில் பதில் அளித்து நாட்டை நல்வழியில் கொண்டு செல்ல வேண்டும். நாட்டு மக்கள் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்