முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விவேக் மகன் மரணம்: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை - தமிழக திரைப்பட நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னகுமார் (13) மரணத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.  தமிழக முதல்வர் ஜெயலலிதா, திரைப்பட நடிகர் விவேக்கின்  மகன்  செல்வன்  பிரசன்ன குமாரின் மறைவையடுத்து, விவேக்குக்கு  30.10.2015 நாளிட்டு அனுப்பிய இரங்கல் கடிதத்தின் விவரம் பின்வருமாறு:- “தங்களின் அன்பு மகன் செல்வன் பிரசன்ன குமார் 29.10.2015 அன்று உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்றும், செல்வன் பிரசன்ன குமாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும்  எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.செல்வன் பிரசன்ன குமாரை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்