முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை: தமிழகத்தில் இன்றும் - நாளையும் மழை

புதன்கிழமை, 25 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று தெரிகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் ஆரம்பித்த வடகிழக்கு பருவமழை காரணமாக மழை கொட்டி கொண்டிருக்கும் நிலையில், தற்பொழுது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இரு  நாட்களுக்கு மழையும் அடுத்த 2 நாட்களுக்கு கன மழையையும் எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியின் போது கூறுகையில்,

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உருவாகும்பட்சத்தில் 26, 27 (இன்றும் - நாளையும்) ஆகிய தேதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்க முடியும். மேலும் 29,30 ஆகிய தேதிகளில் கன மழையையும் எதிர்பார்க்கலாம். சென்னையைப் பொறுத்தவரை 25ம் தேதி் முதல் இரு நாட்களுக்கு மழை இருக்க வாய்ப்பில்லை. வானம் தெளிவாக காணப்படும். வரும் நாட்களில், புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையின் போக்கைப் பொறுத்து மழையை எதிர்பார்க்கலாம் என அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்