முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மெட்ரோ ரயில்: ஜப்பான் ரூ. 1080 கோடி உதவி

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

செ0ன்னை, சென்னை மெட்ரோ ரயில் மேம்பாட்டு பணிக்காக ஜப்பான் அரசு ரூ. 1080 கோடி நிதி உதவி அளிக்கிறது.

இந்தியா ஜப்பான் இடையே கடந்த 1958 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பொருளாதார ஒப்பதங்கள் நிறைவேற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளில் இது மேலும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், இந்தியாவின் இரு திட்டங்களுக்கு ஜப்பான் நிதி வழங்குவதற்கு முன்வந்துள்ளது.சென்னையில் செயல்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் கட்ட பணிக்காக 19.981 பில்லியன் யென்னும் (ரூ. 1080 கோடி), அகமதாபாத் மெட்ரோ திட்டத்துக்காக 82.434 பில்லியன் யென்னும் (ரூ. 4456 கோடி) ஜப்பான் வழங்குகிறது.இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா, ஜப்பான் அதிகாரிகள் நேற்று புதுதில்லியில் கையெழுத்திட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்