முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

ராமேசுவரம், நெடுந்தீவருகே மீன் பிடித்த 8 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. இதில் 4 மீனவர்கள் ராமேஸ்வரத்தையும், 4 மீனவர்கள் புதுக்கோட்டையையும் சேர்ந்தவர்கள். இவர்கள், படகுகளுடன் காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மீன்பிடித்துறை உதவி இயக்குநர் கோபிநாத் தெரிவித்தார். கைது செய்யப்படும் போது இலங்கைப் பகுதிக்கு அருகே இவர்கள் மீன் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 26-ம் தேதி 15 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். பிறகு முதல்வர் ஜெயலலிதா அன்றைய தினமே பிரதமர் மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதினார். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே பாக் ஜலசந்தியில் கச்சத்தீவுப் பகுதியில் 4 ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது படகு பாறையில் மோதியதால் சேதமடைந்த படகுடன் சிக்கியிருப்பதாக கோபிநாத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்