முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. சோதனைக்கு அரசியல் சாயம் பூச கெஜ்ரிவால் முயற்சி: அருண் ஜெட்லி குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை ஏதும் நடக்கவில்லை என்றும், இச்சோதனைக்கு ஜெக்ரிவால் அரசியல் சாயம் பூச முயற்சிப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குற்றஞ்சாட்டியுள்ளார்.புதுடெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. மாநில துணை நிலை ஆளுநர் பிரச்சினை மற்றும் போலீஸ் நிர்வாக பிரச்சினையில் அரவிந்த கெஜ்ரிவால் மத்திய பாரதீய ஜனதா அரசை  அடிக்கடி குற்றம்சாட்டிவருகிறார்.

இந்நிலையில் தனது அலுவலத்தில் சிபிஐ சோதனை நடந்ததாக அரவிந்த கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது., அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. தலைமை செயலகத்தில் என்னுடைய அறையில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியவில்லை என்பதால் இது போன்ற கோழைத்தனமான முடிவை மோடி இப்போது எடுத்து உள்ளார் என கூறி இருந்தார். 

இந்நிலையில் இதற்கு அளித்துள்ள சிபிஐ., முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறையில் சோதனை  நடத்தவில்லை என்றும் முதல்வரின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் அறையிலேயே சோதனை என விளக்கம் அளித்து உள்ளது.  மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியும் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை மறுத்தார். நாடாளுமன்ற மேல் சபையில் விவாதத்தின் போது அவர் இது தொடர்பாக கூறியதாவது., கெஜ்ரிவால் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை எதையும் நடத்தவில்லை. உயர் அதிகாரிகள் ஒருவர் ஊழல் வழக்கில் தொடர்புபட்டுள்ளதால் அவரது அலுவலகத்தில் மட்டுமே சோதனை நடந் துள்ளது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்