முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் இந்தியா உறுதுணையாக இருக்கும்: ராஜ்நாத்சிங்

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

ஜெய்பூர் - தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுத்தால், அதற்கு இந்தியா எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், இந்தியா அதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஜெய்பூரில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுகுறித்து தெரிவிக்கையில்., இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான தீவிரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானில் இருந்துதான் வெளிப்படுகின்றன. தனது மண்ணில் இருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பல்வேறு தீவிரவாத குழுக்களுக்கு எதிராக அந்நாடு உண்மையான உறுதியுடன்  நடவடிக்கையை எடுக்க வேண்டும்.  தீவிரவாதிகளுக்கு எதிராகவும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுத்தால் இந்தியா அதற்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்