முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை

வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் - தெலுங்கானா மாநிலம், கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் அறிமுக மாணவர் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கல்லூரி இளங்கலை வகுப்பில் சேர்வதற்கு முன்னதாக இரண்டாண்டுகளுக்கு 'இன்ட்டர்மிடியேட்' எனப்படும் கல்லூரி புகுமுக வகுப்பில் பயின்று தேர்ச்சிபெற வேண்டும். அவ்வகையில், இங்குள்ள ஹூஸுராபாத் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்த சாய் கிருஷ்ணா என்பவர், கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.

நேற்று காலை அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்ட அறைத் தோழர்கள் விடுதி வார்டனுக்கு தகவல் அளித்தனர்.  வார்டன் அளித்த புகாரின்பேரில் விரைந்துவந்த போலீசார், பிரேதத்தை கயிற்றில் இருந்து கீழே இறக்கி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்ற இயலாததால் இந்த முடிவை தேர்ந்தெடுத்ததாக சாய் கிருஷ்ணா எழுதியதாக கூறப்படும் கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்