முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனேவில் இன்று இந்தியா-இலங்கை இடையேயான முதல் டி-20 போட்டி

திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2016      விளையாட்டு
Image Unavailable

துபாய்- புனேவில் இன்று இந்தியா-இலங்கை இடையேயான முதல் டி-20 போட்டி நடக்கிறது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் 3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டித் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி புனேயில் இன்று  நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. டி-20 அணிகளின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் இந்தியா (120 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (118 புள்ளி), இலங்கை (118 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன. முதலிடத்தை இந்திய அணி தக்க வைக்க வேண்டும் என்றால் இந்த தொடரை கட்டாயம் வென்றாக வேண்டும்.

தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால் தரவரிசை புள்ளி எண்ணிக்கை 127 ஆக உயரும். இலங்கை 112 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு சரியும். 2-1 என்ற கணக்கில் வென்றால் 122 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கும். மாறாக இலங்கை அணி தொடரை 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தினால் 125 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறும். அவ்வாறு நிகழும் போது இந்திய அணி 112 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்படும். இலங்கை 2-1 என்று வென்றாலும் 121 புள்ளியுடன் முதலிடத்தை பிடிக்கலாம். அப்போது இந்தியா 117 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்