எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கூட்டணி தர்மத்தை மட்டுமல்ல, புதுச்சேரி மாநிலத்தையே புதைக்குழிக்குள் தள்ளியவர் ரங்கசாமி என்று புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா தாக்கி பேசினார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 30 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து உப்பளம் புதிய துறைமுகம் திடலில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வரும், அ.தி.மு.க பொதுசெயலாளருமான ஜெயலலிதா பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- மாற்றம் ஒன்றே மாறாதது என்றார் கிரேக்க அறிஞர். இதற்கு காரணம் என்னவென்றால், மாற்றத்தின் மூலமாகத் தான் ஏற்றத்தைக் காண முடியும். மாற்றத்தின் மூலமாகத் தான் மறுமலர்ச்சியை உருவாக்க முடியும். ஆனால், புதுச்சேரியில் என்ன நடக்கிறது? கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் அதில் இருந்து பிரிந்து வந்த இயக்கம் ஆகியவை தான் புதுச்சேரியை ஆண்டு கொண்டிருக்கின்றன. தற்போது புதுச்சேரியை ஆளுகின்ற கட்சியும் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த கட்சி தான். இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பதை, இவர்களது நடவடிக்கைகள் மூலம் நிரூபித்து வருகிறார்கள். காங்கிரஸ்காரர்களாக இருந்தாலும், காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பொதுத் தேர்தலில், எனது தலைமையிலான அ.தி.மு.க. ஓர் அணியாகவும், ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் ஓர் அணியாகவும், காங்கிரஸ்-தி.மு.க. ஓர் அணியாகவும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் ஆட்சியை நீங்கள் பல ஆண்டுகள் பார்த்து இருக்கிறீர்கள். மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போதெல்லாம் இந்த மாநிலத்திற்காக ஏதாவது நல்லது செய்திருக்கிறார்களா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கோஷ்டிப் பிரச்சனையை தீர்க்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. காங்கிரஸ்-தி.மு.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக இங்கு விவசாயமே வீழ்ந்து விட்டது. எந்தவித தொழில் வளர்ச்சியும் ஏற்படவில்லை. புதிதாக தொழிற்சாலைகள் ஏற்படுத்தப் படாததோடு, இருக்கின்ற தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியினுடைய ஆட்சி மத்தியிலே இருந்த போது, இந்தப் பிரதேசத்திற்கு நிதி சலுகையுடன் கூடிய மாநில அந்தஸ்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்ததா? அல்லது இந்த புதுச்சேரி யூனியன் பிரதேசத்தினுடைய கடன் சுமையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்ததா? எதுவுமே செய்யவில்லை.
தி.மு.க-வைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு சொந்தமான ஜெ.ஆர். பவர்ஜென் நிறுவனத்திற்கு நிலக்கரி வெட்டி எடுக்கும் உரிமையை, மறைமுக முறையில் வழங்கி தங்கள் வளர்ச்சியை மேம்படுத்திக் கொண்டது தான் மிச்சம். புதுச்சேரியின் வளர்ச்சி புஸ்வாணமாகி விட்டது. இங்கு மட்டுமல்ல. எங்கும் எதையும் செய்யவில்லை. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி என்றாலே இமாலய ஊழல் கூட்டணி என்பது தான் பொருள். நிலக்கரி ஊழல், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல் என பல்வேறு ஊழல்களை செய்து மக்களால் தண்டிக்கப்பட்ட கூட்டணி காங்கிரஸ்-தி.மு.க.கூட்டணி. விளையாட்டிலேகூட விளையாடியவர்கள் என்றால், அந்தக் கூட்டணி எப்படிப்பட்ட ஊழல் கூட்டணி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரர்கள் இவர்கள்.
தற்போது புதுச்சேரி மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியை விட மோசமானது. காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த கட்சி அப்படித் தான் இருக்கும். காங்கிரஸ் எதிரி என்றால், என்.ஆர்.காங்கிரஸ் துரோகி. 2011-ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்திற்கு நடைபெற்ற தேர்தலின் போது, அ.தி.மு.க.,வும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் இணைந்து போட்டியிட்டன. நான்கேட்டுக் கொண்டதன் பேரில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு நீங்களும் வாக்களித்தீர்கள். தேர்தல் முடிந்து பெரும்பான்மை பெறாத சூழ்நிலையில், சுயேட்சையின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தவர் தான் ரங்கசாமி. கூட்டணி தர்மத்தை குழி தோண்டிப் புதைத்தவர் ரங்கசாமி. கூட்டணி தர்மத்தை மட்டுமல்ல, இந்த மாநிலத்தையே புதை குழியில் தள்ளி விட்டிருக்கிறார் ரங்கசாமி. இவருடைய ஆட்சிக் காலத்திலும் புதுச்சேரி எந்த விதமான வளர்ச்சியையும் அடையவில்லை.
சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் கொடிகட்டி பறக்கின்றன. இவரால் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது. மத்திய அரசை வலியுறுத்தியோ, வற்புறுத்தியோ, எந்தக் காரியத்தையும் ரங்கசாமியால் சாதிக்க முடியாது.அதற்குரிய தகுதி அருகதை என்,ஆர்.காங்கிரஸ் கட்சியிடம் இல்லை. நம்பிக்கை துரோகம் செய்வது என்பது ரங்கசாமிக்கு கை வந்த கலை. அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் மிகப் பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்திருக்கிறார் ரங்கசாமி. உங்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் திரு. ரங்கசாமி நிறைவேற்றவில்லை என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது தற்கொலைக்கு சமம். எனவே, என்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன். என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போதும் சரி, என்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போதும் சரி, உங்கள் பிரச்சனையை மையப்படுத்தி போராட்டங்கள் நடத்திய ஒரே இயக்கம் அதிமுக என்பதை இங்கே பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் தி.மு.க. இருந்த போதும் சரி, காங்கிரஸ் இருந்த போதும் சரி, அவர்கள் எல்லாம் எதிர்க்கட்சியாகவே செயல்படவில்லை. பெயருக்கு எதிர்த்ததோடு சரி. மற்றபடி ஆளும் கட்சியின் கைப்பாவைகள் தான் தி.மு.க-வும், காங்கிரஸ் கட்சியும் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஆனால் உண்மையான எதிர்க்கட்சியாக, தொடர்ந்து மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க.,தான் என்பதை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட போதும் சரி, பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட போதும் சரி, வெள்ள நிவாரணத்தை அளிக்காத போதும் சரி, ஏழை எளிய மக்களின் விவசாய நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்த முயன்ற போதும் சரி, காமராஜர் வீடு கட்டும் திட்டத்திற்கான மானியத்தை உயர்த்தாத போதும் சரி, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியை பெறாத போதும் சரி, உங்கள் நலனுக்காக, உங்களுக்காக பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட இயக்கம் அ.தி.மு.க.,தான். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களில் 30-ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: சென்னை வானிலை மையம் தகவல்
26 Apr 2024சென்னை, வரும் 30-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ