முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரச்சந்தை கூடும் தேதிகள் மாற்றம் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - சட்டமன்றத்தேர்தல் வாக்குப்பதிவையொட்டி மே 16-ம் தேதி வாரச்சந்தையை கூடும் தேதியை மாற்றம் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- 

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 2016-க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் நடைபெறும் நாளான 16.05.2016 (திங்கட்கிழமை) அன்று பல இடங்களில் வாரச்சந்தை நடைபெறக்கூடும். வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும் வகையில் சந்தை கூடும் நாளை 17-ம் தேதிக்கு மாற்றும்படி மாவட்ட ஆட்சியாளர்கள் கோரப்பட்டுள்ளனர். இதைத் தகுந்த முறையில் விளம்பரப்படுத்த மாவட்ட ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்