எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை : ஊழல் என்றாலே கருணாநிதி; கருணாநிதி என்றாலே ஊழல்' , ஊழலையும் கருணாநிதியையும் பிரிக்க முடியாது என்று கோவை கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக தாக்கி பேசினார்.
தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, நேற்று கோவை `கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக, சென்னையில் இருந்து வான் வழியாகப் புறப்பட்டு கோவை சென்றடைந்த போது, கோவை மாநகர், கோவை புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பிலும், கேரள மாநிலக் கழகத்தின் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா பொதுக்கூட்ட மேடை நோக்கிச் சென்ற போது, சாலையின் இரு மருங்கிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து கழகக் கொடியையும், கழகத்தின் வெற்றிச் சின்னமாம் `இரட்டை இலை' சின்னத்தையும்; அதே போல், தொழிலாளர்கள் தொழிற்சங்கக் கொடிகளையும் தங்கள் கைகளில் ஏந்தியும்; பெருந்திரளான மகளிர் பூரண கும்ப மரியாதை அளித்தும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.
அதன் தொடர்ச்சியாக, பல்வேறு திருக்கோயில்களின் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்ற போது, தம்மைக் காண்பதற்காகத் திரண்டிருந்த பல லட்சக்கணக்கான மக்களுக்கு கழகத்தின் வெற்றிச் சின்னமாம் `இரட்டை இலை' சின்னத்தைக் காண்பித்து, கழக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி என்பது தான் பொருள். நிலக்கரி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல் என பல்வேறு ஊழல்களைச் செய்து மக்களால் தண்டிக்கப்பட்ட கூட்டணி காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி. காமன்வெல்த் விளையாட்டிலே கூட விளையாடியவர்கள் என்றால் அந்தக் கூட்டணி எப்படிப்பட்ட ஊழல் கூட்டணி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி, மத்தியில் பதவியில் இருந்த போது இத்தாலியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் ஊழல் நடைபெற்றது பற்றி தற்போது ஊடகங்களில் வெளி வந்துள்ளது. இப்படித் தான் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என ஊழல் ஆட்சியையே திமுக-வும், காங்கிரஸும் சேர்ந்து மத்தியிலும் மாநிலத்திலும் நடத்தி வந்தனர். ஆனால் கருணாநிதியும், திமுக-வினரும் தற்போது உத்தமர் போல் பேசி மக்களை ஏமாற்றி விடலாம் என பகல் கனவு காண்கின்றனர். இவர்களது ஊழல் பற்றி அனைத்தும் தெரிந்த தமிழக மக்களிடம் இவர்களது மாய்மாலம் எதுவும் எடுபடாது. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி தான்.
விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லவர் கருணாநிதி
"விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லவர்" என்ற பட்டத்தை நீதியரசர் சர்க்காரியாவிடமிருந்து அந்தக் காலத்திலேயே பெற்றவர் தான் கருணாநிதி. வீராணம் ஊழல், பூச்சிக்கொல்லி மருந்து ஊழல், மஸ்டர் ரோல் ஊழல், நில அபகரிப்புகள், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல் என அனைத்திலும் பரந்து விரிந்து ஊழல் இருந்தது திமுக ஆட்சியில் தான்.
1 லட்சத்தி 76,000 கோடி இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற இமாலய ஊழலை புரிந்தது திமுக-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர். இந்த ஊழல் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதைப் பற்றி கருணாநிதி என்ன சொன்னார்? காங்கிரஸ் கட்சி தங்களை பழி வாங்குகிறது என்றார் கருணாநிதி. காங்கிரஸ் எதற்காக திமுக-வை பழி வாங்க வேண்டும்? பழி வாங்குகிறது என்றால் காங்கிரஸுக்கான உரிய பங்கு கொடுக்கப்படவில்லை என பொருள் கொள்ளலாமா? அப்படி பழி வாங்கிய காங்கிரஸுடன் தற்போது எதற்காக திமுக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது? இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற வகையில் ஏழை மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக தொலைதொடர்பு துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியதாக அந்த மத்திய அமைச்சரும், கருணாநிதியும் கூறியுள்ளனர். எந்த ஏழை மக்கள் பயனடைய இவர்கள் புரட்சியை ஏற்படுத்தினார்கள்? கருணாநிதியும் அவர் குடும்பமும் என்ற ஏழை மக்களுக்கா?
`ஊழல் என்றாலே கருணாநிதி; கருணாநிதி என்றாலே ஊழல்' என்று சொல்லும் அளவுக்கு ஊழலுடன் பின்னிப் பிணைந்துள்ள கருணாநிதி, ஊழலற்ற ஆட்சி வழங்குவாராம்! இதை கேட்பவர்கள் என்ன ஏமாளிகளா? ஊழலையே தொழிலாகக் கொண்டுள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணி வாக்கு சேகரிக்க உங்களைத் தேடி வரும் போது அவர்களது ஊழல்களை எடுத்துச் சொல்லி அவர்களை விரட்டி அடியுங்கள். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்
இப்பொழுது பல அரசியல் கட்சித் தலைவர்களும் மதுவிலக்கு பற்றி பேசி வருகிறார்கள். எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும். முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்குக்கு சட்டம் கொண்டு வருவோம் என்றும், அரசு மதுபான விற்பனையிலிருந்து விலகும் என்றும் சொன்னது பற்றி நான் கேள்வி கேட்டதும், கருணாநிதி ஒரு கூட்டத்தில் முதல் கையெழுத்தே மதுவிலக்குக்குத் தான் என்று ஒரு வெற்று வாக்குறுதியை அளித்தார். அதை மாற்றி தஞ்சாவூர் கூட்டத்தில் ஒரே நாளில் சட்டம் இயற்றுவோம் என மீண்டும் சொல்லியுள்ளார். அதே கூட்டத்தில் மதுவிலக்கு என்றால் மதுக்கடைக்கு யாரும் செல்லக் கூடாது. மதுக்கடைக்கு செல்கின்றவர்களை தீண்டத் தகாதவர்களாக பார்க்க வேண்டும் என ஒரு புதிய விளக்கத்தையும் கொடுத்துள்ளார். இப்படி முன்னுக்குப் பின் முரணாக கருணாநிதி பேசுவதிலிருந்து ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. மதுவிலக்குக் கொள்கையில் திமுக-வுக்கு எந்தவித அக்கறையும் இல்லை. மதுவிலக்கைப் பயன்படுத்தி வாக்குகளைப் பெற முடியுமா என்று தான் மதுவிலக்குப் பற்றி அவர்கள் பேசி வருகிறார்கள். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 18 hours ago |
ஆனியன்ப்ரை4 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.