முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய்மல்லையா ராஜ்ய சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்

திங்கட்கிழமை, 2 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : வங்கிகளில் ரூ9ஆயிரத்து 400 கோடி கடன் வாங்கி கட்டாமல் உள்ள மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா தனது ராஜ்ய சபை எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார்.

மதுபான தொழிலதிபர் விஜய்மல்லையா வங்கிகளில் ரூ9ஆயிரத்து 400கோடி கடன் வாங்கி கட்டாமல் உள்ளார் அவர் மீது அமலாக்கத்துறையின் பண பரிவர்த்தனை மோசடி வழக்கும் உள்ளது. இந்த நிலையில் அவர் கடந்த 2மாதமாக லண்டனில் இருந்து வருகிறார். அவரை நாடு கடத்துமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பிரிட்டனை கேட்டுக்கொண்டுள்ளது.  இந்த நிலையில் ராஜ்ய சபையின் எம்.பி பதவியில் இருந்து விஜய்மல்லையாவை நீக்குவது தொடர்பாக மேலவையின் மரபுக்குழு முடிவு எடுத்தது. இந்த முடிவை தொடர்ந்து விஜய்மல்லையா தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். எனது பெயர் மேலும் கெடுவதை நான் விரும்பவில்லை எனவே எம்.பி.பதவியை நான் ராஜினாமா செய்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.அவர் தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்ய சபை தலைவர் ஹமீத் அன்சாரிக்கு அனுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்