முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் நிலோபருக்கு கூடுதல் பொறுப்பு: வக்பு வாரியம் வழங்கப்பட்டது

சனிக்கிழமை, 28 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, நிலோபர் கபிலுக்கு தொழிலாளர் நலத்துறை இலாகா ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அமைச்சர் வளர்மதியிடம் இருந்த வக்பு வாரியம் அவருக்கு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா கடந்த 23-ந்தேதி பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.அன்று மாலையே மந்திரி சபை விஸ்தரிக்கப்பட்டு மேலும் 4 புதிய மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். மந்திரி சபையில் புதிதாக சேர்க்கப்பட்ட பாஸ்கரன், சேவூர் ராமச்சந்திரன், நிலோபர் கபில், பால கிருஷ்ணா ரெட்டி ஆகியோர் 24-ந்தேதி பதவியேற்றுக் கொண்டனர்.இதில் நிலோபர் கபிலுக்கு தொழிலாளர் நலத்துறை இலாகா ஒதுக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் வளர்மதியிடம் இருந்த வக்பு வாரியம் நிலோபர் கபிலுக்கு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் கவர்னர் ரோசையா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்