முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறந்த நாள் பரிசளிக்க வந்த தொண்டருக்கு அடி உதை கொடுத்த விஜயகாந்த்

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தர்மபுரி வேட்பாளர் பாஸ்கருக்கு, சரமாரியாக அடி உதை விழுந்தது. அப்போது ஆரம்பித்ததுதான். ஒவ்வொரு கூட்டம் நடைபெறும் போதும், உடன் இருப்பவர்களை அடிப்பதோ அல்லது தொண்டர்களை மிரட்டுவதோ விஜயகாந்தின் வாடிக்கை ஆகிவிட்டது.

கடந்த வருடத்தில், பல தருணங்களில் பத்திரிக்கையாளர்களுடன் மோதல் போக்கை மேற்கொண்ட விஜயகாந்த் சிலரை அடிக்க பாய்ந்த நடவடிக்கைகளும் நடந்தது. குறிப்பாக டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,

"தூக்கி அடிச்சிருவோம் பாத்துக்கோ" என்று கூறியது, பின்னர் ராஜ் பவனுக்கு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, "குண்டக்க மண்டக்க கேட்டுருவேன்... பட்டுபட்டுன்னு கேப்பேன் என்று பேசியது, இவற்றைத் தொடர்ந்து உச்சகட்டமாக பத்திரிக்கையாளர்களைப் பார்த்து "த்தூ... தூ... தூ..." என துப்பியது இப்படி பல்வேறு இடங்களில் அவர் நடந்துகொண்ட விதம் மக்கள் மத்தியில் விஜயகாந்த் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.

சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, கடந்த 3 மாதங்களாகவே, அடி தடி மற்றும் பத்திரிக்கையாளர்களுடன் மோதல் போக்கில்லாமல் அமைதியாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் பிறந்த நாளை நேற்று கொண்டாடிய விஜயகாந்த், மீண்டும் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி உள்ளார். தனக்கு பிறந்தநாள் பரிசாக போட்டோ ஒன்றை பரிசாக அளிக்க வந்த தொண்டர் ஒருவர், பரிசளிக்கும்போது விஜயகாந்தை பார்க்காமல், போட்டோவுக்கு தொடர்ந்து போஸ் கொடுத்துக் கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், அந்த தொண்டரைச் சராமாரியாக அடித்தார்.

போட்டோவுக்கு பொஸ் கொடுத்திருந்த தொண்டர், தன் மீது அடி விழுந்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பிறந்த நாள் நிகழ்ச்சியில் தொண்டர் ஒருவரை விஜயகாந்தை தொடர்ந்து அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தேமுதிக தொண்டர்களே கேப்டன் எங்களை அடித்தால் எங்களுடைய பாக்கியம் என்கின்றனர். விஜயகாந்தை அடிக்கடி சந்திக்க செல்லும் வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோர் ஊஷாரக இருப்பார்களா...?

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்