முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க பேச்சாளர் தீப்பொறி கார்த்திகேயன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க பேச்சாளர் தீப்பொறி கார்த்திகேயன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க தலைமைக்கழக பேச்சாளரும், திருப்பூர் புறநகர் மாவட்டம், உடுமலைப்பேட்டை எம்.ஜி.ஆர் மன்றத் துணை செயலாளருமான தீப்பொறி கார்த்திகேயன் உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். கழகத்தின் மீதும், கழகத்தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்ப கால கழக உடன்பிறப்பு தீப்பொறி கார்த்திகேயன், தலைமைக்கழக பேச்சாளராக கழகத்தின் கொள்கைகளையும், கழக அரசின் சாதனைகளையும் எதிர்க்கட்சியினரின் பொய்ப்பிரச்சாரங்களையும் நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைத்தவர் ஆவார்.

அன்புச்சகோதரர் தீப்பொறி கார்த்திகேயனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலி்ல் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்