முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த 14 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி :முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - அரியலூர் மாவட்டத்தில் லாரி-வேன் மோதி உயிரிழந்த 14 பேரின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு., அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், சூரியமணல் மதுரா, கச்சிப்பெருமாள் என்ற இடத்தில் 25-ம் தேதி அன்று லாரியும், வேனும் மோதிய விபத்தில், வேனில் பயணம் செய்த கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி ராஜகுமாரி, மாசிலாமணி என்பவரின் மனைவி முனியம்மாள், ராமச்சந்திரன் என்பவரின் மகன் மருது பாண்டியன், ராஜேந்திரன் என்பவரின் மனைவி காசியம்மாள், பஞ்சநாதன் என்பவரின் மனைவி காமாட்சி, சின்னப்பன் என்பவரின் மகன் மணிகண்டன், முருகையன் என்பவரின் மனைவி ராணி, சேட்டு என்பவரின் மனைவி சித்ராநடராஜன் என்பவரின் மனைவி செந்தாமரை, ராஜமாணிக்கம் என்பவரின் மனைவி சரஸ்வதி, தங்கதுரை என்பவரின் மனைவி செல்வி, செல்வராசு என்பவரின் மனைவி அன்னமயில், சாமிநாதன் என்பவரின் மனைவி வளர்மதி மற்றும் அன்பழகன் என்பவரின் மனைவி வாசுகி ஆகிய 14 நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சாலை விபத்தில் 11 நபர்கள் பலத்த காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், தஞ்சாவூர் மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்கள் அனைவரும், விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்