முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயர்வு

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி : பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.34 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.37 காசும் உயர்ந்தது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை மாற்றத்திற்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. இந்த வாகன எரி பொருள்களின் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அடிப்படையில் விலை அதிகரிப்பை அறிவிக்க வேண்டும். அப்படி மேற்கொள்ளாத பட்சத்தில் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்க வேண்டியுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும் என மத்திய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி வருகின்றன.

அதன்படி, நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.34 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.37 காசும் அதிகரிக்கப்பட்டது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்