முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணல் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் விருது பெற இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்துவருகிறது. அவ்வகையில் 2017-ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருதுபெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

www.tn.gov.in\ta\forms\deptname என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சென்னை ஆதிதிராவிடர் நலஇயக்குநர் அலுவலகத்தில் அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்