முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென் மார்க் ஓபன் பாட்மிண்டன் 2வது சுற்றில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

ஓடென்ஸ் : டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி யடைந்தார்.

டென்மார்க் ஓடென்ஸ் நகரில் டென் மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில்  பிரேசில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து பங்கேற்றார்.

தரவரிசையில் 6-வது இடத்தில்  உள்ள சிந்து 13-21, 23-21, 18-21 என்ற செட் கணக்கில் ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் போராடி 12-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சயகா சாடோவிடம் தோற்றார்.  ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு பி.வி.சிந்து பங்கேற்ற முதல் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்