முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரிய அதிபருக்கு எதிராக டிசம்பரில் தீர்மானம்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2016      உலகம்
Image Unavailable

 சியோல், தென்கொரிய அதிபர் பார்க் குவென் ஹையை பதவி நீக்கம் செய்யக்கோரி அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் வரும் டிசம்பர் 2-ம் தேதி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

அதிபர் பார்க் குவைன் ஹையின் ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக எதிர்க்கட்சி கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அதிபரின் நெருங்கிய தோழி சோய் சூன் சில் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிபருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அதிபருக்கு எதிராக வரும் டிசம்பர் 2-ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்