முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்காணல் தேர்வு வேலூர் மண்டலத்தில் 26.12.2016 முதல் 30.12.2016 வரை தினமும் காலை 9.00 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும் நேதாஜி கலையரங்கம் கோட்டை அருகில், வேலூர் 632 004 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது எனவும், அதனில் குறிப்பிட்டுள்ள நாளில், அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் நேர்முக அழைப்பாணை கிடைக்கப்பெறாதவர்கள் நேர்முக அழைப்பாணைகளை றறற.வn.பழஎ.in என்ற வலைதளத்திலிருந்து 22.12.2016 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் நேர்முக அழைப்பாணைகளை 23.12.2016 மற்றும் 24.12.2016 ஆகிய நாட்களில் அந்தந்த மாவட்ட மண்டல இணை இயக்குநர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.  நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வு வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்