எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சாலை விபத்துகளை தடுப்பது குறித்து, ஏ.டி.ஜி.பி., ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சமீப காலமாக ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, விபத்துகளை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்த ஆய்வு கூட்டங்களை ஏ.டி.ஜி.பி., மாஹளி, கடந்த சில நாட்களாக நடத்தி வருகிறார். இதன்படி, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், எஸ்.பி., சிவக்குமார், ஏ.எஸ்.பி., பாலாஜி சரவணன், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், நெடுஞ்சாலை ரோந்து போலீசார், ஆர்.டி.ஓ.,க்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். விபத்து அதிகம் நடப்பதாக கண்டறியப்பட்ட பகுதிகளில், விபத்துக்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, போலீசார், பிற துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. மாலையில், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில், விபத்து அதிகம் நடக்கும் இடங்களில், ஏ.டி.ஜி.பி., ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விபத்துகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


