முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீடாமங்கலத்தில் எம்.ஜி.ஆரின் 29ம் ஆண்டு றினைவு நாள் அமைதி ஊர்வலம்

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      திருச்சி
Image Unavailable

 

நீடாமங்கலம் ஒன்றிய நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 29ம் ஆண்டு நினைவு நாள் அமைதி ஊர்வலம் நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.சங்கர் தலைமையிலும்,தெற்கு ஒன்றிய செயலாளர் கோ.அரிகிருஷ்ணன் முன்னிலையிலும் தஞ்சை சாலையில் உள்ள அண்ணாசிலை அருகிலி

ருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பெரியார் சிலை அருகில் பூக்களால் அலங்கரிக்கப் பட்டு வைத்திருந்த எம்.ஜி.ஆர் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் இ.ஷாஜகான்,முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பூபதி மாரியப்பன்,பேரூராட்சி முன்னாள் துணைதலைவர் எஸ்.செந்தமிழ்ச்செல்வன்,ஒன்றியகுழு முன்னாள் தலைவர்கள் எம்.ஆர்.ராஜேந்திரன்,தவமணிஇளங்கோவன்,நகர எம்.ஜி.ஆர்மன்ற தலைவர் வேலு.கலியபெருமாள் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைகழக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்