எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் : தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களால் இதுவரை 10 ஆயிரத்து 411 பேர் சுமார் ரூ.21 கோடி மதிப்பில் பயனடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகளின் நலனை மேம்படுத்திடும் விதமாகவும்,அவர்கள் சுயமாக தன்னம்பிக்கையுடன் சமுதாயத்தில் முத்திரை பதித்திட ஊக்குவித்திடும் வகையிலும் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் வருவாய்த்துறையின் மூலம்; 10ஆயிரத்து 411 மாற்றுத்திறனாளிகள் மொத்தம் ரூ.21.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைப் பெற்று பயனடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் 6 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளும், 2 மனநல காப்பகங்களும், ஒரு மனவளர்ச்சி குன்றியோருக்கான ஆரம்பகால பயிற்சி மையமும், ஒரு உடல் ஊனமுற்றோருக்கான இல்லமும், ஒரு 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுதவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் அரசு சிறப்பு மருத்துவர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டு இதுவரை மொத்தம் 26ஆயிரத்து 721 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட 40 சதவீதம் மற்றும் 40 சதவீதத்திற்கும் அதிகமான மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள், வருவாய்த்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஆவார்கள். இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தற்போது ஆயிரத்து 158 பயனாளிகள் மாதந்தோறும் ரூ.ஆயிரம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களான மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2ஆயிரத்து 940 பயனாளிகளுக்கு ரூ.5கோடியே 42லட்சத்து 52ஆயிரம் மதிப்பிலும், கடும் உடல் ஊனமுற்றோருக்கான பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 848 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 55லட்சத்து 34ஆயிரம் மதிப்பிலும், தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 60 பயனாளிகளுக்கு ரூ.9லட்சத்து 90ஆயிரம் மதிப்பிலும், தொழுநோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 62 பயனாளிகளுக்கு ரூ.7லட்சத்து 68ஆயிரம் மதிப்பிலும், கை,கால் பாதிக்கப்பட்டோர், பார்வையற்றோர், காது கேளாதோருக்கான திருமண உதவித்தொகை மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.4லட்சம் மதிப்பிலும், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 372 பயனாளிகளுக்கு 10லட்சத்து 25ஆயிரம் மதிப்பிலும், வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.17ஆயிரம் மதிப்பிலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற காது கேளாத மற்றும் பார்வையற்ற மாணவ, மாணவியருக்கான பரிசுத்தொகை வழங்கும் திட்டத்;தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.65ஆயிரத்து 550 மதிப்பிலும், மீட்புத்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.15ஆயிரம் மதிப்பிலும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.16ஆயிரம் மதிப்பிலும், பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.20ஆயிரம் மதிப்பிலும், சுயதொழில் புரிவோருக்கான வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 47 பயனாளிகளுக்கு ரூ.4லட்சத்து 70ஆயிரம் மதிப்பிலும், இலவச பேருந்து பயணச் சலுகை திட்டத்தின் கீழ் 373 பயனாளிகளுக்கு ரூ.4லட்சத்து 16ஆயிரத்து 410 மதிப்பிலும், இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 35 பயனாளிகளுக்கு ரூ.20லட்சத்து 54ஆயிரத்து 150 மதிப்பிலும், மூன்று சக்கர வண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.32ஆயிரம் மதிப்பிலும், சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.81ஆயிரம் மதிப்பிலும், சிறப்பு சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு ரூ.6லட்சம் மதிப்பிலும், நவீன செயற்கை அவயம் வழங்கும் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 80ஆயிரம் மதிப்பிலும், கால்தாங்கி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.18,400 மதிப்பிலும், காதொலிக்கருவி வழங்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.15லட்சம் மதிப்பிலும், மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.2லட்சம் மதிப்பிலும், ஊன்றுகோல் வழங்கும் திட்டத்தின் கீழ் 35 பயனாளிகளுக்கு ரூ.10ஆயிரத்து 10 மதிப்பிலும், வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 5ஆயிரத்து 396 பயனாளிகளுக்கு ரூ.13கோடியே 62லட்சத்து 96ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் 10ஆயிரத்து 411 பயனாளிகளுக்கு ரூ.21கோடியே 49லட்சத்து 60ஆயிரத்து 520 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் வழங்கும் ஏற்றம் பெறும் விதமாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இத்தகைய நலத்திட்டங்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை அனுகி முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
15 Jul 2025லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு
15 Jul 2025சிவகங்கை : திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
-
காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை உதயநிதி ஸ்டாலின்
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
15 Jul 2025சென்னை, அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி வலைதளங்களில் வீடியோ வைரல்
15 Jul 2025துபாய், பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடிகளில் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.