எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், தலைமையில் நேற்று (28.12.2016) நடைபெற்றது.
   பரிசு  
இந்த தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:-
நுகர்வோர் என்பவர் பொருட்கள் அல்லது சேவைகளை விலை மற்றும் வாக்குறுதி கொடுத்து வாங்குபவர் ஆவர். நுகர்வோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24-ஆம் நாள் தேசிய நுகர்வோர் தினமும், மார்ச் 15 - ஆம் நாள் உலக நுகர்வோர் உரிமை தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் நேற்று (28.12.2016) தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடையே நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
   ஆணையம்  
நுகர்வோர்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் அல்லது மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தினை அணுகலாம். இதில் நுகர்வோருக்கு வாதாட வழக்கறிஞர் தேவையில்லை நாமே வாதாடலாம், எளிய வழக்காடு முறைகள் பதிவுதபாலில் புகாரை அனுப்புதல் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளது. மேலும் நுகர்வோர் தங்கள் குறைகள் குறித்து மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுத்தலைரான மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ரசீதுகளுடன் புகார் அனுப்பி தீர்வு பெறலாம். மேற்கண்ட வழிகளில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் மட்டுமே நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற வேண்டும். எனவே அனைத்து நுகர்வோர்களும் தாங்கள் வாங்கும் பொருட்களின் தரம், எடையளவு, சரியான விலை போன்றவற்றை கருத்தில் கொண்டு வாங்குவதுடன் ஆடம்பர நுகர்வை தவிர்த்து தரமான பொருட்கள் மற்றும் சேவைகளை முறையாக பயன்படுத்தி நுகர்வோர் நலனை பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் இந்திய பொருளாதாரம் மேம்பாடு அடைய நுகர்வோர் அனைவரும் பாதுகாப்பான மின்னணு பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் க.பஞ்சவர்ணம், பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் சு.சதீஷ்குமார், வட்டாட்சியர்கள் ரேணுகாதேவி, கமலக்கண்ணன் உள்ளிட்ட பல்வேறு வட்டாட்சியர்கள், மாவட்ட நுகர்வோர் குழுத்தலைவர் சு.தனவேலு, பொதுச்செயலாளர் வேலவேந்தன், நுகர்வோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 1 month ago | 
-   
          தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் தகவல்25 Oct 2025சென்னை: 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. 
-   
          சர்வதேச ஒருநாள், டி- 20 கிரிக்கெட்: விராட் கோலி உலக சாதனை25 Oct 2025சிட்னி: சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ரன்கள் குவித்தன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன் குவித் 
-   
          இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்25 Oct 2025சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். 
-   
          டெல்டா மாவட்டங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சேதங்கள் வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 
-   
          ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை விதிக்க அமெரிக்காவுக்கு உக்ரைன் அதிபர் கோரிக்கை25 Oct 2025ரஷ்யா: ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். 
-   
          கரூர் நெரிசல்: மத்திய அரசின் ரூ.2 லட்சம் நிதி பாதிக்கப்பட்டோரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது25 Oct 2025கரூர்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் செப்.27 இல் கரூா் நகரில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 போ் பலியானவர்களின் குடும்பத்தி 
-   
          சாதனையை சமன் செய்த ராணா25 Oct 2025ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3-வது மற்றும் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் நேற்று மோதியது. 
-   
          3-வது ஒருநாள் போட்டியில் ரோகித், விராட் கோலி பேட்டிங்கை பார்த்தது மகிழ்ச்சி: கேப்டன் சுப்மன்25 Oct 2025சிட்னி: கோலி பேட்டிங்கை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இந்தியா வெற்றி... 
-   
          ரோகித் - கோலி அபாரம்: கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி25 Oct 2025சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஓருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
-   
          பீல்டிங்கின்போது ஸ்ரேயாஸ் காயம்25 Oct 2025மும்பை: ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடி சென்று அற்புதமாக பிடித்த போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் ஸ்ரேயாஸ் அய்யருக் 
-   
          கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்26 Oct 2025கரூர் : கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார். 
-   
          இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2025.26 Oct 2025
-   
          கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு26 Oct 2025வாஷிங்டன் : கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். 
-   
          'பைசன்' படக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு : இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி26 Oct 2025சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். 
-   
          ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி சம்பவம்: ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.26 Oct 2025ராஞ்சி : ஜார்க்கண்ட்டில் ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. 
-   
          8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்26 Oct 2025சென்னை : 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல், சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. 
-   
          சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு26 Oct 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது. 
-   
          நேரடியாக போர் தொடுப்போம்: ஆப்கானுக்கு பாக். பகிரங்க எச்சரிக்கை26 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச 
-   
          உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - 4 பேர் பலி26 Oct 2025கீவ் : உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். 
-   
          ஆசியான் உச்சி மாநாடு: மலேசியாவில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு26 Oct 2025கோலாலம்பூர் : ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
-   
          திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: தங்க தேரில் சுவாமி வீதிஉலா26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தங்க தேரில் சுவாமி வீதிஉலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம 
-   
          கந்தசஷ்டி சூரசம்ஹார விழா; திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்26 Oct 2025திருச்செந்தூர் : கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி நெல்லை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 
-   
          திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 
-   
          கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி26 Oct 2025திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டம் அடிமலி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 
-   
          குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி26 Oct 2025தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

























































