எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி, இந்து பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் 'ரோஸ் மில்க்’ கொடுக்கின்றனர் என்று தெரிவித்த முதல்வர்மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேறொரு இந்தியா உள்ளது என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி சென்றுள்ளார். அவர் அம்மாவட்டத்தில் நேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதன்பின், நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றம் தர்கா கொடியை முருக பக்தர்கள் வணங்குகிறார்கள் என்றார்.
இது தொடர்பாக முதல்வர்மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாட்டு சாதனைகள் வளர்ச்சியடைந்த இந்தியா என்றால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேறொரு இந்தியா உள்ளது. வறுமை, மதவன்முறை, கும்பல் படுகொலைகள், கல்வியை கெடுக்கும் முயற்சிகள், வேலைவாய்ப்பின்மை இதுதான் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தில் கூட மாற்றுத்தினறாளிகள், குழந்தைகளை தாக்கும் சூழ்நிலையை பா.ஜ.க. அரசு உருவாக்கியுள்ளது. இதைத்தான் தமிழ்நாட்டிலும் கொண்டுவர பா.ஜ.க. நினைக்கிறது. ஆனால், நம் மக்கள் உஷார்.
திருப்பரங்குன்றம் தர்கா கொடியை முருக பக்தர்கள் வணங்குகிறார்கள். மதுரை சித்திரை திருவிழாவுக்கு வரக்கூடிய இந்து பக்தர்களுக்கு பள்ளிவாசல்களில் இஸ்லாமிய சகோதரர்கள் ரோஸ் மில்க் கொடுக்கின்றனர். தை முதல் நாளில் தேவாலங்களில் பொங்கல் வைத்து படைக்கிறார்கள். கிறிஸ்துமஸ், ரம்ஜான் வந்துவிட்டால் கேக், பிரியாணி எங்கே என்று இந்துக்கள் உரிமையாக கேக்கின்றனர். எம்மதமும் சம்மதம் என்கிற தமிழ்நாட்டு மக்களுடைய ஒற்றுமை, மத நல்லிணக்கம்தான் மதவாத அரசியல் செய்து மக்களை பிளவுபடுத்த நினைக்கும் பா.ஜ.க.வின் கண்களை உறுத்துகிறது. எத்தனை அடிமைகளை சேர்த்துக்கொண்டு பா.ஜ.க. அந்தர்பல்டி அடித்தாலும் சரி ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டு மக்களிடம் மதவெறியை தூண்ட முடியாது’ என்றார்.
முன்னதாக, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், தீபத்தூண் அருகே தர்கா இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி தீபம் ஏற்ற தமிழக அரசு மறுத்துவிட்டது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அதேவேளை, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கடந்த 21-ம் தேதி மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 6ம் தேதி சந்தனக்கூடும் திருவிழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


