முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் ஸ்ரீஐயப்பன் கோவிலில் சுவாமியின் ரத ஊர்வலம்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      திண்டுக்கல்
Image Unavailable

 

திண்டுக்கல் ஸ்ரீஐயப்பன் திருக்கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு சுவாமியின் மின்தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது. 

மண்டல பூஜை திண்டுக்கல் மலையடிவாரம் ஸ்ரீஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் தினந்தோறும் பஜனை மற்றும் சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மண்டல ஞீஜையை முன்னிட்டு சுவாமி ரத ஊர்வலம் நடைபெற்றது. 

விழாவின் 2ம் நாளில் மதியம் அனைத்து தெய்வங்களுக்கு ஆராதனையும் மற்றும் சக்தி ஞீஜை நடைபெற்றது. நிகழ்ச்சியினை எம்.பி. வாட்ச் உரிமையாளர் எம்.பிச்சைமாணிக்கம், தமிழரசி மெடிக்கல் என்.மணிமாறன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாலை 6 மணியளவில் சாயரட்சை ஞீஜை நடைபெற்றதையடுத்து மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி ஸ்ரீஐயப்பன் வீற்றிருந்தார். முன்னர் ஸ்ரீகோட்டை விநாயகர் வெள்ளிக்கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊர்வலத்தினை ஊர் முக்கிய பிரமுகர்கள் துவக்கி வைத்தனர். தேருக்கு முன்புறம் கேரளாவில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட கலைக்குழுவினர் சுவாமி வேடமணிந்து நடனமாடி சென்றனர். பக்தர்கள் கோலாட்டம் ஆடியவாறு முன்னே சென்றனர். ரத ஊர்வலம் காந்தி மார்க்கெட், மேற்கு ரதவீதி, பழனி ரோடு, 108 விநாயகர் கோவில் ரோடு, சத்திரம் தெரு, கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, மாரியம்மன் கோவில் வழியாக மீண்டும் திருக்கோவிலை வந்தடைந்தது. சுவாமிக்கு அத்தால ஞீஜை நடைபெற்று அதில் பக்தி பரவசத்துடன் பொதுமக்கள் பங்கேற்றனர். நிறைவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்