முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      ஈரோடு

 

சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்;-ஈரோடு) மற்றும் எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 9.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் தமிழ்நாட்டில் உள்ள பல முன்னனி நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு ஆணையினை வழங்க உள்ளனர்.படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.இம்முகாமிற்கு கல்லூரி தாளாளர் வசந்தா சுத்தானந்தன் ; தலைமை தாங்க உள்ளார். கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். சண்முகசுந்தரம் அவர்கள் முன்னிலை வகிக்க உள்ளார். தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம் ஈரோடு) இணை இயக்குநர் தி.பழனிகுமார் திட்ட விளக்கவுரை ஆற்ற உள்ளார். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை துணை முதல்வர் கே.ஜி. பார்த்திபன் மற்றும் அனைத்துத் துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சிறப்பாக செய்திருக்கின்றனர். இலவச பேருந்து வசதி: ஈரோடுஇ கோபிஇ கொடுமுடிஇ திருப்பூhஇ; காங்கயம்இ சென்னிமலைஇ பெருந்துறை பேருந்து நிலையம் அருகிலிருந்து பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்