எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இடநகர், - கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக முதல்வர் பீமா காண்டு துணை சவுனா மெய்ன், மற்றும் இதர 5 எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் அருணாச்சல பிரதேச மக்கள் கட்சி அறிவித்தது. புதிய முதல்வராக தகம் பாரியோ தேர்வு செய்யப்படுவார் என அந்த கட்சி அறிவித்தது. ஆனால், நானே முதல்வராக நீடிப்பேன் . எனது அரசுக்கு 49 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது என பீமா காண்டு தெரிவித்தார். அருணாச்சல பிரதேசத்தில் முதல்வர் பா.ஜ.கவுக்கு ஆதரவாக ஈடுபட்டு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆளும் அருணாச்சல மக்கள் கட்சி அவரையும் , துணை முதல்வர் சவுனா மெய்னையும் இதர 5எம்.எல்.ஏக்களையும் சஸ்பெண்ட் செய்தது. இந்த நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தில் பீமா கண்டு அரசுக்கு மட்டுமே ஆதரவு அளிப்போம் வேறு யாரும் முதல்வராக ஆதரவு அளிக்க மாட்டோம் என பா.ஜ.க திட்டவட்டமாக தெரிவித்தது.ஆளும் தற்போது ஆளும் அருணாச்சல பிரதேச மக்கள் கட்சி புதிய முதல்வராக தகம் பாரியோவை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது. கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின்னர் அவரது தேர்வு பற்றிய முறைப்படியான அறிவிப்பு வெளிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது அதில் இருந்த முன்னணி தலைவர் பீமா காண்டு மற்றும் பெரும்பான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சியை விட்டு விலகி அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியில் இணைந்தனர். அதன் பின்னர் அருணாச்சல பிரதேச மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றது. அந்த கூட்டணி அரசில் பா.ஜ.க வும் உள்ளது. பீமா காண்டு கடந்த 6 மாதத்திற்கு முன்னர் பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஆறு மாதத்தில் தற்போது ஆளும் கூட்டணி அரசில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல்வர் பீமா காண்டு , துணை முதல்வர் சவுனா மெய்ன் , மற்றும் இதர 5 எம்.எல்.ஏக்கள் கட்சி விரோத நடவடிக்கையில் உள்ளனர். அவர்கள் பா-ஜ.கட்சியை சார்ந்தே உள்ளனர் என கட்சி தலைமை குற்றம் சாட்டி அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.
அருணாச்சல பிரதேச சட்டமன்றத்தில் மொத்தம் 60 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்களில் 43 பேர் அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள் ஆவார்கள். 12 பேர் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள். 3 பேர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களாகவும் ,ஒருவர் சுயேட்சை எம்.எல்.ஏவாகவும் உள்ளனர். இந்த மாநிலத்தில பீமா காண்டு கடந்த ஜூலை மாதம் முதல்வராக பதவியேற்றார். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பின்னர் முதல்வராக பதவியேற்றார். அவரும் இதர 42 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் அருணாச்சலபிரதேச மக்கள் கட்சியில் சேர்ந்தார்கள்.
தற்போது ஆட்சியில் உள்ள அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியின் கூட்டணி கட்சியாக பா.ஜ.க உள்ளது.இந்த நிலையில் கூட்டாளி கட்சியிடம் எந்த வித ஆலோசனையும் செய்யாமல் அருணாச்சல மக்கள் கட்சி பீமா காண்டுவையும்,துணை முதல்வர் சவுனா மெய்ன் மற்றும் இதர 5எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. பீமா காண்டு கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் ஆளும் கட்சியின் சார்பில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுகிறார்.
இது குறித்து, அருணாச்சலபிரதேச மக்கள் கட்சியின் தலைவர் காபா பென்கியா கூறுகையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வராக தகம் பாரியோ தேர்வு செய்யப்படுகிறார் என தெரிவித்தார். இருப்பினும், முன்னாள் துணை முதல்வர் காமங் தோலோ தற்போதைய ஊரக மேம்பாட்டுத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தங்கா பயலிங் மற்றும் பாரியோ ஆகியோரின் பெயர்கள் முதல்வர் பதவிக்கு அடிபட்டன. இருப்பினும் கட்சி அனைத்து எம்.எல்.ஏக்களும் பாரியோ பெயரையே முதல்வர் பதவிக்கு ஏகமனதாக அறிவித்துள்ளனர் என்று பென்கியா தெரிவித்தார்.
கடந்த 5 மாதமாக முதல்வர் பதவியில் இருந்த பீமா காண்டு அருணச்சல பிரதேச மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு வந்ததே இல்லை. அவர் மேலும் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கைய அதிகரிக்கவும் எந்தவித முயற்சியையும் எடுக்க வில்லை என பென்கியா குற்றம் சாட்டினார்.கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பீமா காண்டு கூட்டணி அரசில் உள்ள பா.ஜ.கட்சிக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளார் என்றும் அவரது கட்சிதரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் பீமா காண்டு ,துணை முதல்வர் சவுனா மெய்ன் மற்றும், இதர 5எம்.எல்.ஏக்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியின் சார்பில் தகம் புதிய முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டபோதும், பீமா காண்டு தனது அரசுக்கு 49 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதாகவும் ,தானே ஆட்சியில் நீடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் வளர்ச்சியை பரம்பரை சொத்து வரி முறை சிதைத்து விடும்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, பரம்பரை சொத்து வரி முறை இந்தியாவின் பத்தாண்டு கால வளர்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை சாடியுள்ளார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கேரளாவில் வாக்குப்பதிவின் போது மயங்கி விழுந்து 4 பேர் உயிரிழப்பு
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வட தமிழக உள் மாவட்டங்களில் 30-ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: சென்னை வானிலை மையம் தகவல்
26 Apr 2024சென்னை, வரும் 30-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.