முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வனத் துறை கூண்டுக்குள் சிக்கிய குரங்கு

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      ஈரோடு

குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த குரங்கை வனத் துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர். ஈரோடு அருகே நசியனூர் ஆலச்சாம்பாளையம் கிராமத்தில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக ஆண் குரங்கு ஒன்று சுற்றித் திரிந்தது. நடந்து செல்பவர்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தி வந்தது. கிராம மக்கள் விரட்டினாலும் அங்கிருந்து செல்லாமல் அட்டாகசம் செய்து வந்ததையடுத்து, குரங்கை கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இரண்டு நாள்களுக்கு முன்பு மாவட்ட வன அலுவலர் கூடுதல் பொறுப்பு அருண்லால் உத்தரவின்பேரில் வனச் சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத் துறையினர் ஆலச்சாம்பாளையம் கிராமத்தில் கூண்டு வைத்தனர்.  கூண்டில் சிக்காமல் தப்பிவந்த குரங்கு வெள்ளிக்கிழமை காலை கூண்டுக்குள் சிக்கியது. இதையடுத்து, வனத் துறையினர் அந்தக் குரங்கை பர்கூர் வனப் பகுதிக்குள் விட்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago