முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுமுறை பயணமாக வந்துள்ள போர்ச்சுக்கல் பிரதமருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள போர்ச்சுக்கல் நாட்டின் பிரதமர் அண்டோனியோ கோஸ்டாவுக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசுமுறைப் பயணம்
ஏழு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்றிரவு புதுடெல்லி வந்தடைந்த போர்ச்சுக்கல் நாட்டின் பிரதமர் அண்டோனியோ கோஸ்டாவை, மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் எஸ்.ஒய். நாய்க் மற்றும் வெளியுறவுத்துறை உயரதிகாரிகள் வரவேற்றனர். நேற்று காலை ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய அண்டோனியோ கோஸ்டா, ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகை சென்றார்.

அணிவகுப்பு மரியாதை
அங்கு அவருக்கு முப்படை அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்புடன்  அளிக்கப்பட்டது. வரவேற்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை இதயபூர்வமாக ஏற்றுகொள்வதாக குறிப்பிட்டார். அண்டோனியோ கோஸ்டாவின் தந்தை, போர்த்துகீசிய காலணி ஆதிக்கத்தின்கீழ் இருந்தபோது கோவாவில் பிறந்தவர் ஆவார். இருநாட்டு உறவு குறித்து நேற்று பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார்.  துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியையும் சந்தித்துப் பேசுசினார். தனது ஏழு நாள் பயணத்தின்போது பெங்களூர், குஜராத், கோவா ஆகிய இடங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்