முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியானஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு: கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி:தமிழக அரசால் வழங்கக்கூடிய விலையில்லா பொங்கல் பரிசு தொகுப்பு நமது மாவட்டத்தில் 3,68,421 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதனடிப்படையில் முதல் கட்டமாக பெரியானஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பினை கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்.  காரிமங்கலம் வட்டம், பெரியானஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகளான 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு துண்டு போன்றவற்றை கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்.பின்னர் கலெக்டர்  தெரிவித்ததாவது :-தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 1007 நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கட்டுப்பாட்டில் 40 நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1047 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

01.06.2011க்கு பிறகு தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 13 முழு நேர நியாய விலைக்கடைகள், 47 பகுதிநேர நியாய விலைக்கடைகள் ஆக மொத்தம் 60 நியாய விலைக்கடைகள் துவங்கப்பட்டுள்ளது எனவும், அதேபோல் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 1 முழுநேர நியாய விலைக்கடையும், 5 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் ஆக மொத்தம் 6 நியாய விலைக் கடைகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார். இவ்விழாவில் பெரியானஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்  சென்னகேசவன்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  இரா. சண்முகசுந்தரம், சரக துணை பதிவாளர் மற்றும் பொது விநியோகத்திட்டம்  ஆர். மணிகண்டன், துணைப்பதிவாளர்கள்   பழனிசாமி,  சரவணன், சங்கத்தின் இயக்குநர்கள், சார்பதிவாளர்கள், பொது விநியோத்திட்ட கள அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்