முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னேரி வட்டத்தில் விலையில்லா வேட்டி சேலை மற்றும் பொங்கல் பரிசுகளை எம்.பி.வேணுகோபால்,எம்.எல்.ஏ.சிறுணியம் பலராமன் ஆகியோர் வழங்கினர்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      திருவள்ளூர்
Image Unavailable

தமிழ்நாடு அரசு சார்பில் திருவள்ளுர் மாவட்டத்தில் வர்தா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும்,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி சேலை,பொங்கல் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.பொன்னேரி வட்டம்,கிருஷ்ணாபுரத்தில் வர்த்தா புயலில் பாதிக்கப்பட்டு இறந்த புதுப்பாக்கம் பவித்ரா,வைரவன்குப்பம் கம்சலா ஆகியோரது குடும்பங்களுக்கு தலா 4 இலட்சம் ரூபாயும்,கால்நடைகளை இழந்த 19 நபர்களுக்கு தலா 3,000 ரூபாயும்,வீடுகளை இழந்த 28,795 நபர்களுக்கு 5000 வீதம் 12 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. பொன்னேரி கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைப்பெற்ற விழாவில் இந்த நிவாரணம்,விலையில்லா வேட்டி சேலை மற்றும் பொங்கல் பரிசுகளை திருவள்ளுர் எம்.பி.வேணுகோபால்,பொன்னேரி எம்.எல்.ஏ.சிறுணியம் பலராமன் ஆகியோர் வழங்கினர்.உடன் வட்டாட்சியர் செந்தில்நாதன்,தனி வட்டாட்சியர் தமிழ்செல்வன்,வட்ட வழங்கல் அலுவலர் ரஜினி,கிருஷ்ணாபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் பானுபிரசாத்,கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பொன்னுதுரை,ஜனார்தனம் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்