முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோவில் தயாரிக்கப்படும் பி.எம்.டபிள்யூ. கார்களுக்கு 35 சதவீத வரி : டிரம்ப் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,  - மெக்சிகோ நாட்டில் தயாரிக்கப்படும் பி.எம்.டபிள்யூ. கார்களுக்கு அமெரிக்க அரசின் சார்பில் 35 சதவீத எல்லை வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

பி.எம்.டபிள்யூ.
ஜெர்மனி நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் பல்வேறு மாடல்களில் விலையுயர்ந்த சொகுசு கார்களை தயாரித்து வருகிறது. தற்போது பி.எம்.டபிள்யூ. 3 ரக கார்களை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுவரும் இந்நிறுவனத்துக்கு சொந்தமான கார் தயாரிப்பு தொழிற்சாலையின் கிளை சீனாவில் இயங்கி வருகிறது.

டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவை ஒட்டியுள்ள மெக்சிகோ நாட்டில் புதிய தொழிற்சாலை திறப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள சான் லூயிஸ் போட்டோசி நகரில் அமைந்துவரும் இந்த தொழிற்சாலையில் வரும் 2019-ம் ஆண்டுக்குள் கார் தயாரிப்பு தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

35 சதவீத எல்லை வரி
இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் பிரபல நாளிதழுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ள அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப், மெக்சிகோவில் தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பி.எம்.டபிள்யூ. கார்களுக்கு 35 சதவீத எல்லை வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். அவரது இந்த பேட்டி ஜெர்மனி நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்