எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - ஜல்லிக்கட்டு விவகாரத்தில், உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தி,தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவ - மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள், வணிகர்கள் உட்பட தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். "பீட்டா" அமைப்பை தடை செய்யவும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பீட்டா அமைப்பை தடைசெய்க :
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, சென்னை மெரினாவில் 4-வது நாளாக நேற்றும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டு அறவழியில் மாணவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மதுரையில் அறப்போராட்டம் :
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம், உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 4-வது நாளாக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள், குழந்தைகள், வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் சுமார் ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு உடனடி ஆதரவு அளிக்க போராட்டக்காரர்கள்வலியுறுத்தினர்.
திருச்சியில் திரையரங்குகள், தனியார் பள்ளிகள், தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சின்னகடைவீதி, பெரியகடைவீதி, காந்தி மார்க்கெட் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பீட்டா அமைப்பை தடை செய்ய கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தமிழர்களின் கலாச்சாரத்தைப் போற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டியினை நடத்தக்கூடாது என்ற பீட்டா அமைப்பினைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடைகள் அடைப்பு :
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தக் கோரியும், காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்டத்தில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் ஆத்தூரில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. கெங்கவல்லி, தம்மம்பட்டி, தலைவாசல், வீரகனூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வணிகர்கள் தாமாகவே முன்வந்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லாரி உரிமையாளர்கள் போராட்டம் :
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மத்திய அரசு உடனடியாக நீக்க அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தொடர்ந்து 4-வது நாளாக அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லாரி உரிமையாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர கோரி, திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை, வலங்கைமான், நன்னிலம், பேரளம், குடவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து கடைகளை அடைத்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும், பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டியும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் கடையடைப்பில் ஈடுபட்டன.
கரூர் ஜவஹர் பஜார், கோவை சாலை, வெங்கமேடு, லைட் ஹவுஸ் கார்னர், காமராஜ் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை, பள்ளப்பட்டி உட்பட மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மாணவ - மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லையில் போராட்டம் :
நெல்லை பாளையங்கோட்டை, வ.உ.சி. மைதானத்தில் மாணவ - மாணவிகள் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டுக்கான தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தி, புதுக்கோட்டை, அரந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
திருப்பூரில் போராட்டம் :
திருப்பூரில் பின்னலாடை தொழில்துறையினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காளைகளை காட்சிப்பட்டியலிலிருந்து நீக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வரகிறது. தனியார் மினி பேருந்துகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
கும்பகோணத்தில் போராட்டம் :
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி கும்பகோணத்தில் மாணவர்கள், பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் அமைதிப் போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். வர்த்தக நிறுவனங்களும் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆட்டோ ஓடவில்லை :
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் முகநூல் நண்பர்கள் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு ஆதரவாக வணிகர்கள், ஆட்டோக்கள் என அனைத்துத் தரப்பினரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பீட்டா அமைப்பை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வலியுறுத்தினர்.
மூடப்பட்ட ஹோட்டல்கள்:
ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தருமபுரியில் மாணவர்கள், வணிகர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆட்டோ மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறப்போராட்டங்கள் நடைபெற்றன. திருத்தணி, திருவேற்காடு, பூந்தமல்லி, பொன்னேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் போராட்டம் :
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், ஆசிரியர்கள், மகளிர் அமைப்பினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று தொடர் போராட்டத்தில் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்பினர். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரியில் போராட்டக்காரர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் 12 மணி நேர பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆட்டோ, டெம்போக்கள் இயக்கப்படாததுடன், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
"பீட்டா"வுக்கு எதிர்ப்பு:
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி, மாணவ - மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். "பீட்டா" அமைப்பை இந்தியாவிலிருந்து வெளியேற்றவும் அவர்கள் ஆவேசத்துடன் முழக்கமிட்டனர்.
பல்வேறு மாநிலங்களில் ஆதரவு:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வரும் தமிழக இளைஞர்களுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும், தலைநகர் டெல்லியில் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தைத் தொடர்ந்து வெளி மாநிலங்களிலும் ஆதரவு பெருகி வருகிறது. டெல்லியில் ஜன்தர்மந்தர் பகுதியில் கூடிய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டியும், பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டு வரும் விலங்குகளை அழிக்க நினைக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த அமைப்புகளுக்கு எதிராக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பீட்டா அமைப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக இளைஞர்களின் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் விதமாக பல்வேறு மாநிலங்களில் ஆதரவுக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளதால் நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 12 hours ago |
ஆனியன்ப்ரை4 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.