முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய அளவில் ஆண்களுக்கான கபாடிப் போட்டியில் தங்கம் மற்றும் வெங்கலப்பதக்கம் பெற்று சாதனை:பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் பாராட்டு

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம்  தலைமையேற்று பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும்,  புதிய குடும்ப அட்;டைகள் வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 329 மனுக்கள் வரப்பெற்றன.நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொல்லிமலை, செங்கரையில் இயங்கி வரும் அரசு உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பயின்று வரும் 2 மாணவர்கள் மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள பெல் ஸ்டேடியத்தில் பன்னாட்டு ஒலிம்பிக் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கபாடிப்போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டனர். கொல்லிமலை, செங்கரையில் இயங்கி வரும் அரசு உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் செல்வன்.ஆர்.பழனிச்சாமி என்ற மாணவன்  தேசிய அளிவில் நடைபெற்ற ஆண்களுக்கான கபாடிப் போட்டிப்பிரிவில் தங்கம் தங்கப்பதக்கத்தினையும், இதே பள்ளியில் 12 ஆம் பயின்று வரும் மற்றொரு மாணவன் எம்.விமல்ராஜ் என்பவர் வெங்கலப்பதக்கத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். சாதனை படைத்த மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் வெங்கலப்பதக்கங்களும் மற்றும் சான்றிதழ்களும் மற்றும் தமிழக கபாடி அணியின் பயிற்சியாளராக கலந்து கொண்ட பி.சிலம்பரசன் அவர்களுக்கு நினைவுப்பரிவு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன. இவற்றை இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் மு.ஆசியா மரியம் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது கலெக்டர் தங்கப்பதக்கம் மற்றும் வெங்கலப்பதக்கம் பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அசோகன், உதவி ஆணையர் (கலால்) புகழேந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்