எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில். பாரத தேசத்தின் தென்திசையில் காவிரி பாய்ந்தோடும் ஈசான பாகத்தில் அமைந்திருக்கும் கண்ணனூர் என்னும் சமயபுரத்தில் வீற்றிருக்கும் ஆயிரம் கண்ணுடையாள் என்று அழைக்கப்படும் அருள்மிகு மாரியம்மன், கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கி வருகிறாள். வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்பாலித்து கருணை மழை பொழிந்து பூவின் மணமாகவும் பழத்தின் சுவையாகவும் கருணை கடலாகவும் யாவராலும் துதித்து தீராத நோய்களையும் தீவினைகளையும் தீர்த்து அருளும் கருணை உள்ள கொண்டு திகழ்ந்து வருகிறாள். தேவீ மஹாத்மியத்தில் 'சைவகாலே மஹா காளி மஹாமாரி ஸ்வரூபையா" என்று சொன்னவாறு பிரபஞ்சத்தை தோற்றுவித்து ரட்சித்து லயப்படுத்திக் கொண்டுள்ளாள். இந்த பராசக்தியே மாராசூரனை சம்ஹரிக்க மஹாமாரி வடிவம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இப்படி வேண்டுவோர்க்கு வேண்டிய வரும் தரும் சக்தி வாய்ந்த தளமாக உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிமல் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். சபரி மலை, பழனி, வேளாங்கன்னி, மேல்மருவத்தூர், திருப்பதி போன்ற ஆலயங்களுக்கு சுற்றுலா செல்வோர் இங்கும் வந்து செல்கின்றனர். மேலும் கருர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கிளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் மஞ்கள் உடையணிந்து மாரியம்மனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வேப்பிலை கையிலேந்தி பாதயாத்திரையாக வருகின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொறிதல் விழா, சித்திரை மாதம் தேரோட்டம் உள்ளிட்ட விழாக்கள் மிக சிறப்பாக நடைபெறும்.
பங்குனி மாதம் பிறந்தவுடன் ஒவ்வொரு திங்கள் கிழமையும் பூச்சொறிதல் விழா நடைபெறும் அப்போது பல மாவட்டங்களில் இருந்தும் அம்மனை பூக்களால் அலங்கரித்து மேள தாளம், வாணவேடிக்கை, பாரம்பரிய தப்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டத்துடன் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வருவர். 5வாரம் பூச்சொறிதல் விழா முடிந்து சித்திரை பிறந்து முதல் செவ்வாய் கிழமை சித்திரை தேரோட்டம் நடப்பது வழக்கம். தேரோட்ட காலத்தில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி, பால்குடம் எடுத்து மேள தாளத்துடன் சென்று அம்மனை வழிபடுவர். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக வந்து இரவு கோவில் வளாகத்தில் தங்கி அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றால் நினைத்த காரியங்கள் கை கூடும் என்பது நம்பிக்கை. எனவே அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்களின் வசதிக்காக நாமக்கல், பெரம்பலூர், துறையூர், திருச்சி ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்;துகள் இயக்கப்பட்டு வருகிறது. அம்மை போன்ற தீராத நோய்களால் பாதித்தவர்கள் இங்கு வந்து தங்கி சென்றால் பூரண குணமாகும் என்பது ஐதீகம். எனவே பலர் வந்து தங்கி செல்கின்றனர்.ம எனவே சமயபுரம் எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
இப்படி சிறப்பு வாய்ந்த சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கடந்த 2004ஆம் ஆண்டு கும்பாபிசேகம் நடைபெற்றது. சம்பிராதாயப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிN~கம் நடத்தப்படவேண்டும். அதன்படி சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. அரசு ஒதுக்கிய நிதி மற்றும் நன்கொடையாளர்கள் கொடுத்த நிதி உதவியுடன் பலகோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் இருந்து வந்த கோவில் வளாகம் தற்போது நன்கொடையாளர்களால் கிரயம் பெற்று ஒப்படைக்கப்பட்ட சுமார் 22 ஏக்கர் நில பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டு அங்கு முடி மண்டபம், குளியல் வசதிகள் உள்பட பல்வேறு கட்டமைப்புகள் மிகவும் பிரமாண்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக அங்கிருந்த பெருவளை வாய்க்காலையே அப்புறப்படுத்தி திருப்பி விடப்பட்டுள்ளது.
கோவிலின் கிழக்கு பகுதியில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது. மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டுள் ளன. கோவில் திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடந்து வருவதாலும், பாலாலயம் நடந்து 6 மாதங்கள் முடிந்து விட்டதாலும் பக்தர்களின் வழிபாட்டு நலன் கருதி கோவில் கும்பாபிசேகத்தை விரைவில் முடிக்க வேண்டும் என எழுந்த கோரிக்கையின் விளைவாக வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி கும்பாபிசேகம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. எனவே கிழக்கு வாசல் ராஜகோபுரம் தவிர மற்ற கோபுரங்கள், மூலஸ்தான விமானம மற்றும் அனைத்து சன்னதி விமானங்களுக்கும் வருகிற 6ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கும்பாபிN~கம் நடைபெறுகிறது.
இதற்காக யாகசாலை பூஜைகள் 3ஆம் தேதி தொடங்கியது. கும்பாபிசேகத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு, அடிப்படை வசதிக்காக மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உத்தரவின் படி சமயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு வசதிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக 4 இடங்களில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கும் பணி, வாகனங்கள் நிறுத்துமிடம், கழிவறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிசேக விழா ஏற்பாடுகளை இணைஆணையர் தென்னரசு தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.