முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில பட்டமளிப்பு விழா

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் 12.02.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், இல்லத்தந்தையும் முதல்வருமாகிய அருட்திரு. முனைவர். அ. மரியசூசை அவர்களும், உதவி இல்லத்தந்தை அருட்திரு. மரிய லூயிஸ் அவர்களும், துணை முதல்வர், அருட்திரு. ராபர்ட் ரமேஷ் பாபு, பொருளாளர், அருட்திரு. பாரதி பெர்னாட்ஷா ஆகியோரும் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பெரியார் பல்கலைக்கழக தேர்வாணையர் திருமதி. லீலா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, 2015-216-ஆம் கல்வியாண்டில் படிப்பை முடித்துச் சென்ற மாணவ-மாணவியர்களுக்குப் பட்டங்களை வழங்கி ஊக்குவித்தார் .மேலும், பல்கலைக் கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்ற சமூகப் பணித்துறை மாணவர்கள் எட்மண்டு கேர்கெட்டா, ராபின் குஜீர், திலகவதி, வர்கீஸ் லயோலா, அமிர் தோப்போ, டேவிட்தான், அச்சுக்கலைத் துறையைச் சார்ந்த மாணவர்கள் பிரேமா, லட்சுமி கந்தராஜ், ரவி பிரசாந், விக்னேஸ்வரன், மற்றும் பல்கலைக் கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவர்கள், முதுகலை ஆங்கிலத் துறையைச் சார்ந்த மாணவி. கோப்பெருந்திவ்யா, வணிகவியல் துறையைச் சார்ந்த ஆய்வியல் நிறைஞர் மாணவி. விக்டோரியா கேரன் கப்புஸ் ஆகிய 12 மாணவ-மாணவியர்களுக்கும் பட்டங்களுடன், பதக்கம் அணிவித்து கௌரவித்தார். நிகழ்வின் ஒரு பகுதியாகக் கல்லூரி முதல்வர் அவர்களின் முன்மொழிதலின்படி பட்டம் பெற்ற மாணவ-மாணவியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இறுதியாகத் தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.இந்நிகழ்வில் கல்லூரிப் பொறுப்பாளர்கள், துறைத்தலைவர்கள், பேராசியர்கள், பட்டங்கள் பெற்ற மாணவ-மாணவியர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கணினி அறிவியல்துறைத் தலைவி, முனைவர் திருமதி. ம. சவிதாதேவி அவர்கள் தம் துறைப்பேராசிரியர்களுடனும், மாணவர்களுடனும் இணைந்து செய்திருந்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்